சென்னை:

திமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை  எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2 அதிருப்தி எம்எல்ஏக்களும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா அளித்த புகாரின்பேரில், சபாநாயகர் தனபால், அவர்கள்மீது  கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நோட்டீசு அனுப்பினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. சார்பில் சட்டசபை செயலாளரிடம்   “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று தி.மு.க. சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில்,  3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரப்பட்டது. இந்த நிலையில்,  சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 3 அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில்  அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 2 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கும் திமுக வழக்குடன் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாக குறிப்பிட்டு ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.