டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யப்பட்ட விதிக்கப்பட்ட தடையானை, வரும் 9ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விசாரணை கடந்த 5 ஆண்டுகளைக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், சிதம்பரமும், கார்த்தியையும் கைது செய்வதற்கு தடையாணை பெற்றனர். இந்த தடையாணையும் கடந்த 5 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்தது.  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.