டில்லி

டுத்த வாரம் இந்தியாவின் முதல் தனியார் ரயிலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

முதன்முறையாகத் தனியார் நிறுவனத்தின் ரயில் ஒன்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து வரும் ரயில்வே துறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து டில்லி செல்லும் இந்த ரயிலுக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த ரயிலை கொடி அசைத்துத் துவக்கி வைக்க உள்ளார்.

இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோ முதல் டில்லி வரையிலான 554 கி.மீ தூரத்தை இந்த ரயில் 6.15 நிமிடங்களில் கடக்கும். லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.25 மணிக்கு டில்லியை அடையும். மறு வழியில் மாலை 4.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு லக்னோவை வந்தடையும்.

இந்த ரயிலில் 56 இருக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய ஒரு ஏசி கம்பார்ட்மெண்ட்டும், 78 இருக்கைகள் கொண்ட 9 ஏசி கம்பார்ட்மெண்ட் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 758 இருக்கைகள் இந்த ரயிலில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் கான்பூர் செண்ட்ரல் மற்றும் காசியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்.

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் செவ்வாய்க் கிழமைகளில் இயங்காது. இந்த ரயிலின் டிக்கட்டுக்களை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் மட்டுமே பெற முடியுமே தவிர நேரடியாக வாங்க முடியாது.

இந்த ரயிலில் லக்னோ மற்றும் டில்லிக்கு இடையிலான ஏசி சேர் கார் டிக்கட் விலை ரூ.1125 ஆகவும் எக்சிக்யூடிவ் ஏசி சேர் கார் டிக்கட்டுகளின் விலை ரூ. 2310 ஆகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ரயில் கட்டண விவரங்க்ள் மாறுதலுக்கு உட்பட்டவைகள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.