சென்னை

பொங்கலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜனவரி 12 அன்று அரசு விசேஷ விடுமுறை அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி அன்று கொண்டாடப் பட உள்ளது.   அதை ஒட்டி தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி அன்று விசேஷ விடுமுறை அளித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பற்றி மாணவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.