சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்ரல் 1ந்தேதி (நாளை)  மற்றும் 8-ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது.

21 நாட்கள் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்து வகையான போக்குவரத்துகளும்  தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில், சென்னையில்  இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்ரல் 1ந்தேதி  மற்றும் 8-ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சரக்கு ரயில் 3-ம் தேதி காலை 9 மணிக்கு டெல்லி சென்றடையும்,

மற்றொரு ரயில் சென்னையில் இரந்து 8-ம் தேதி புறப்பட்டு  ஏப்ரல்.10-ம் தேதி காலை 9.30 மணிக்கு டெல்லி சென்றடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.