துரை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் ஆகிய இருவரும் மரணம் அடைந்தனர்.

காவல்துறையினர் தாக்குதலால் அவர்கள் மரணம் அடைந்ததால் சிபிஐ காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட 10 காவல்துறையினரை கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டோரில் சிலரும் மற்றும் விசாரணை செய்து வந்த சிபிஐ அதிகாரிகளில் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரைக்குக் கடந்த 24 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று நள்ளிரவு பால் துரை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.