சென்னை

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்புக் கட்டண ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

வருடம் தோறும் பொங்கல் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு தென்னக ரெயில்வே சிறப்புக் கட்டணத்துடன் ரெயில் சேவைகளை இயக்கி வருகிறது.   இது குறித்து இன்று தென்னக ரெயில்வே ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “மதுரை- செங்கல் பட்டு சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் டிசம்பர் 29, ஜனவரி 1, 5, 15 ஆகிய தேதிகளில் மாலை 3.55 மணிக்கு இயக்கப்படும்.   அதே போல செங்கல்பட்டு – மதுரை சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் டிசம்பர் 30. ஜனவரி 2. 6. 16, ஆகிய தேதிகளில் மாலை 5.20 க்கு இயக்கப்படும்.  இந்த ரெயில் தஞ்சை,  கடலூர் மார்க்கத்தில் செல்லும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.