சென்னை

கார்த்திகை தீபத்தையொட்டி முன் பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெர்ற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் என்னும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த விழாவுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.  இதையொட்டி தெற்கு ரெயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “திருவண்ணாமலை வந்து செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரெயில் வசதி செய்யப் பட்டுள்ளது.  இந்த ரெயிலில் முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட உத்தேசிக்கப் பட்டுள்ளது.  சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் கிளம்ப உள்ளது.  அதே போல டிசம்பர் 2 ஆம் தேதி மாலை 3.40 மணிக்கு திருவண்ணமலையில் இருந்து சிறப்பு ரெயில் கிளம்ப உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது