சென்னை

ரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ள இந்திய இங்கிலாந்து  அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி 20 போட்டிகள்,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இதற்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.   இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக மைதானத்தில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது.  இதையொட்டி கிரிக்கெட் ரசிகர்களும் நீண்ட இடைவெளிக்கு பிறக் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ஆவலுடன் இருந்தனர்.  தற்போது தமிழக் கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமியின் அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

ராமசாமி ஒரு தொலைக்காட்சி பேட்டியில், “இந்திய இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 50% ரசிகர்களுடன் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது.  தமிழக அரசும் இதற்கு அனுமதி அளித்தது.  இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.  அதன் அடிப்படையில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.