டில்லி:

பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள, கேன்டீனில் மூத்த அதிகாரி  சாப்பிட்ட பொங்கலில் சிலந்தி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் கேண்டீனில்தான் எம்.பிக்கள், உயரதிகாரிகள் சாப்பிடுவார்கள். அமைச்சர்கள் சிலரும் சில சமயங்களில் இங்கு சாப்பிடுவது உண்டு.

இங்கு எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மலிவு விலையில் உணவுப் பண்டங்கள் வழங்கப்படுகின்றன.

இங்கு சில நாட்களுக்கு முன் உணவருந்தினார் மூத்த அதிகாரி ஒருவர். அப்போது அவர் சாப்பிட்ட பொங்கலில் சிலந்தி ஒன்று கிடந்திருக்கிறது.

 

இது குறித்து அந்த அதிகாரி. “ பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள கேண்டீனில் மதிய உணவு சாப்பிட  சென்றேன். பொங்கல் மற்றும் தயிர்சாதம் கேட்டிருந்தேன். அப்போது பொங்கலில் சிலந்தி கிடந்ததை கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டேன்.  இதனால்  என் உடல்நிலை பாதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

தற்போது இது குறித்து புகார் அளித்துள்ளார்.

“எம்.பிக்கள் உணவருந்தும் கேண்டீனிலேயே அக்கறை இன்றி உணவு தயாரிக்கப்படுகிறது” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.