டிகை ஸ்ரீதேவியில் உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

பாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படும். அதன்பின் ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மாலை 3 மணிக்கு மருத்துவமனையில் இருந்து கிடைக்கும்.

தற்போது அவரது உடல் துபாயில் காவல்துறை தலைமையகத்தில் இருக்கிறது. துபாயில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது. துபாயில் இருந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி உடல் மும்பை வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.