கொழும்பு:
ந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா தடுப்பூசிக்காக நாம் அதிக காலம் காத்திருக்க தேவையில்லை. வரும் 27 ஆம் தேதி இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக நமக்கு கிடைக்கும் என்றும், சுகாதார துறை முன்கள பணியாளர்கள், ராணுவம் மற்றும் காவல்துறை, கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசி பெறப்படும்” என்றார்.