சென்னை,

ல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.

நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இந்திய இலங்கை எல்லை கடற் பகுதியில் மீன்படித்து வருகின்றனர். இவ்வாறு மீன் பிடிக்கும்போது, எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டி அடிப்பதும், படகுகளை சேதப்படுத்துவதும், கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே   மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை, அங்கு ரோந்து கப்பல்களில்  வந்த இலங்கை கடற்படை வீரர்கள்  தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.  மேலும் தமிழக மீனவர்களின்  படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தினர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் அங்கிருந்து திரும்ப முயன்றனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாக கூறி  13 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இலங்கை கடற்படையினரில் இந்த தொடர் தாக்குதல் மற்றும் கைது  காரணமாக தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.