கொல்கத்தா:

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது வெட்கமான செயல் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து வந்து சர்வதேச போட்டியை விளையாடும் வீரர்கள் மாஸ்க் அணிவது சரியானது கிடையாது. காற்று மாசுபாடு ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. இது நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்காது.

டில்லியில் மாசு அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். டில்லி அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதாக வெட்கமாக உணர்கிறேன். இது அரசியல் பிரச்சனை கிடையாது, உண்மையான பிரச்சனை’’ என்றார்.