கொழும்பு:

லங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருவதை முன்னிட்டு 109  தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு அறிவித்து அவர்கள் தமிழகம் திரும்பிய  நிலையில் மேலும் 20 தமிழக மீனவர்களை விடுக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த 129 மீனவர்கள், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 109 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், மீதமுள்ள 20 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த மீனவர்கள் நீதிமன்ற நடைமுறைக்கு பின்னர், தமிழக மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வர இருக்கிறார். இதன் காரணமாக நல்லெண்ண அடிப்படையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.