ராமேஸ்வரம்,

ச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது.

மீனவர்களிடம் இருந்த மீன்களை பறித்துக்கொண்ட இலங்கை கடற்படை, மீனவர்களை கற்கள் மட்டும் பாட்டில்களால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த  சேகர் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மீனவர்களின் படகுமீது, கப்பலைக் கொண்டு மோதியதில், மீனவர்களின் படகு சேதம் அடைந்ததோடு, மீனவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும்,  இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களிடம்  “இனிமேலும் எல்லைத் தாண்டினால் கொன்றுவிடுவோம்” என எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இது அப்பகுதி மீனவர்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.