துபாய்

நடிகை ஸ்ரீதேவி தற்செயலாக நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்துள்ளதாக மரணச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

நடிகை ஸ்ரீதேவி ஒரு திருமணத்துக்காக துபாய் சென்ற போது கடந்த 24ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார்.   அவர் மரணத்துக்கான காரணம் தெரியாததால் அவர் உடலை கொண்டு வர தாமதம் ஆகியது.  தற்போது அவருடைய மரணச் சான்றிதழ் அவர் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் மாரடைப்பால் மரணம் என செய்தி வந்துள்ள நிலையில் தற்போது மரண சான்றிதழில் தற்செயலாக அவர் நீரில் மூழ்கியதால் மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து துபாய் அதிகாரிகள் அவர் குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறந்துள்ளார் எனவும் இதில் சந்தேகத்துக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்