துபாய்

டிகை ஸ்ரீதேவி இறந்த போது அவருடைய ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததால் அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் முழுகி இருக்கலாம் என கல்ஃப் நீயுஸ் செய்தித்தாள் சந்தேகம் தெரிவித்துள்ளது

நடிகை ஸ்ரீதேவி குளியல் அறை தொட்டியில் விழுந்திருந்ததைக் கண்டு அவர் கணவர் போனி கபூர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.   அங்கு அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.   தற்போது அவரது மரண சான்றிதழ் வெளியாகி உள்ளது.

அதில் அவர் தற்செயலாக தண்ணீரில் மூழ்கியதால் மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.    துபாய் அதிகாரிகள் அவர் குளிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கல்ஃப் நியூஸ் என்னும் செய்தித் தாள் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மது கலந்திருப்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் மாரடைப்பால் மரணம் அடையவில்லை எனவும்  குடி போதையில் நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளார் எனவும் தகவல் அளித்துள்ளது.