துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) மரணமடைந்தார். அவருடன் தமக்கு இருந்த அனுபவம் குறித்த கட்டுரையில் ரிஷிராஜ் சிங், இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தாலும் வெளியில் இருந்து அழுத்தம் தராமல் குளியல் தொட்டியில் உள்ள ஓரடி தண்ணீரில் ஒரு நபரின் கால்களோ அல்லது தலையோ மூழ்காது. ஆகவே ஸ்ரீதேவி மரணம் கொலையாக இருக்கலாம் என்பது உமாதாதன் கணிப்பு என்று தமது கட்டுரையில் கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி தனது கணவருடன் ஒரு திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்றபோது ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.