மும்பை:

றைந்த ஸ்ரீதேவியின் உடல்  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பபட்டது.

துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. ஸ்ரீதேவியின் அந்தேரி பகுதியில் உள்ள இல்லத்தில்  ஸ்ரீதேவியின்  உடல் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9.30 மணி முதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்  வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது,  பாலிவுட், கோலிவுட் உள்பட  தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஸ்ரீதேவியின்  ரசிகர்கள், பொதுமக்கள் போன்றோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டது. வாகனத்தின் முகப்பில் ஸ்ரீதேவியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.

சுமார் 2 மணி அளவில் அவரது உடல் ஏற்றப்பட்ட வாகனம் ஊர்வலமாக செல்ல தொடங்கியது. இன்று மாலை 4 மணிக்குள்   ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் தகனம் செய்யப்படும்  ஸ்ரீதேவியின் குடும்பத்தார் தெரிவித்திருந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சாலையின் இரு புறங்களிலும், ஏராளமானோர்  கண்ணீர்ல அஞ்சலி செலுத்திய நிலையில்,  அவரது உடல்  மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.