யாழ்ப்பாணம்

இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரை நீக்க அவர் சார்ந்த தமிழரசு கட்சியிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட மாகாண அமைச்சரவையில் உள்ள நால்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் இருவரை பதவி விலக உத்தரவிட்ட முதல்வர் விக்னேஸ்வரன் மற்ற இருவருக்கு எதிராக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய அவர் சார்ந்த தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து அவரை பதவி நீக்கம் கோரும் கடிதத்தை நேற்று இரவு அவசர அவசரமாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் அக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் உட்பட 18 பேர் கையெழுத்திட்டு அளித்தனர்.

இந்த நிலையில் புதிய முதலமைச்சராக அவைத்தலைவர் சி. வி.கே.சிவஞானம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது