கொழும்பு,

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

இந்தியா இலங்கை இடையேயான நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்து உள்ளது.

ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 92 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசு கைது செய்தது.

சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முன்வந்தது. அதன்படி, முதற்கட்டமாக தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி, இலங்கை ஜப்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 66 மீனவர்களும், மன்னார் சிறைச்சாலயில் அடைக்கப்பட்டிருந்த 11 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படும் மீனவர்கள் அனைவரும், இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது