சென்னை

லங்கைக் கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 27 மீனவர்களை கைது செய்துள்ளனர்

தற்போது வீசிய ஓகி புயல் தமிழக மீனவர்களை கடுமையாக பாதித்துள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 430 மீனவர்கள் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை.   அவர்களை காப்பாற்ற மீனவர்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தற்போது மீனவர்களுக்கு மேலும் ஒரு சோதனை நிகழ்ந்துள்ளது.   ஐந்து படகுகளில் சென்ற தமிழக மீனவர்கள் 27 பேர் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொண்டிருருந்தனர்.    அந்த நேரத்தில் அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்துளனர்.    அவர்கள் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்து இலங்கைக்கு அழைந்துச் சென்றுள்ளனர்.   அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கைது சம்பவம் அடிக்கடி நடைபெறுவது தொடர்வதாக கூறிய மீனவ சமுதாயத்தினர் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.