தஞ்சை:

“திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் திமுக தலைவர் ஸ்டாலின்!” மட்டும்தான் என்று சசிகலாவின்  சகோதரர் திவாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை தொகுதி எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா சசிகலாவின் தம்பி திவாகரன் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது,  “இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நாளைய தமிழகம் அவர்தான்.

“திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்” .தமிழகத்தில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பெரியார் பிரச்சனையில் கன்னடத்திலிருந்து வந்த ஒருவர் பெரியாரை இழிவாகப் பேசுகிறார். இதேபோல் கர்நாடகாவில் நாம் கன்னடர்களை இழிவாகப் பேசினால் சும்மா விடுவார்களா? அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்களுக்காக யார் போராடுவார்களோ, தமிழர்களை யார் காப்பாற்றுவார்களோ அவர்களின் பின்னால் நாம் நிற்கவேண்டும்.

அதற்கு கண் முன் தெரிகின்ற ஒரே ஒரு நட்சத்திரமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தான் மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அந்த வெற்றி பெரும்பாலான இடங்களில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 85% உள்ளாட்சி இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கும்.

எங்கள் பகுதியில் 4 ஒன்றியங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. வெற்றிச் சான்றிதழை தராமல் இழுத்தடித்துவிட்டு அடுத்த நாள் செய்தித்தாளில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.