திருச்சி:

திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள தி.மு.க. சார்பில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொடியேற்றப்பட்டு மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.

இந்த நடைபயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வை சேர்ந்த 89 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். டெல்டா மாவட்டங்கள் வழியாக பயணிக்கும்

இந்த குழு 12-ம் தேதி கடலூரில் பயணத்தை நிறைவு செய்கிறது. திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை 168 கி.மீ. தூரத்துக்கு இந்த நடைபயணம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.