சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சேலம் எருமப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்,   ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் திமுகவினர் சுமார்  25,000 பேர் ஆங்காங்கே காவல்துறையினரால் தடுக்கப்பட்டு அருகே உள்ள மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். ஸ்டாலின் போராட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி மண்டபத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.