சென்னை

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அறிவித்தபடி நாளை சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் இன்றுக்குள் பேருந்து கட்டணத்தைக் குறைக்காவிட்டால் நாளை போராட்டம் நடத்த இருப்பதாகவும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை சிறிது குறைத்து அறிவித்திருக்கிறது மாநில அரசு.

இது குறித்து கருத்து தெரிவித்த மு.க. ஸ்டாலின், “மிக அதிகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு, கண்துடைப்பாக சிறிது குறைத்திருக்கிறது மாநில அரசு. ஆகவே அறிவித்தபடி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்” என்று தெரிவித்தார்.