சென்னை: கடும் அழுத்தத்தால் சாத்தான்குளம் வழக்கை முதலமைச்சர் மாற்றி உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட  ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்ற அனுமதியை பெற்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர்  இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.