கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேரித்து வரும் நிலையில், இன்று காலை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்  வாக்கிங் சென்றபடி, அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்  மயூரா ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றுகோவை வந்தார். நேற்று மாலை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபயணமாகச் சென்று தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவு திரட்டினார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை இன்று கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப் பாது,இ அவருடன் பொதுமக்கள் பலரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  அப்போது தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தார்.