சென்னை:

காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் மத்திய அரசு அமல் படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  முழக்கமிட்டார்.

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும்  கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை  உள்பட மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  காஞ்சிபுரத்தில், மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மததிய பாஜக அரசுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டார்.  ‘பாசிச பாஜக – தமிழின துரோகி களான அதிமுக, பாமக உள்ளிட்ட கொத்தடிமைக் கட்சிகள் கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டார்.

பின்னர் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், ‘குடியுரிமை சட்டத் திருத்தம்’ மூலம் சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஸ்டாலின் ஆவேசமாக உரையாற்றினார்.