சென்னை:

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு உணவு மற்றும் சேவைகளை செய்ய ரோபோக்கள் உபயோகப்படுத்தப் படுவது குறித்து இன்று சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் நலன் கருதி, நோயாளி களுக்கு  உணவு மற்றும் மருந்துகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்துவதுகுறித்து தமிழக அரசு முயற்சிமேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில், திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு   மருத்துவமனையில் 2  ரோபோக்கள் பரிசோதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது  தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமைனயில் இரண்டு ரோபோக்கல் சோதிக்கப்பட்டதாக தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்து உள்ளார்.

அவரது பதிவில்,  “காலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு விஜயம் செய்தேன். கொரோனா வார்டுகளில் பயன்படுத்த வேண்டிய ரோபோ செவிலியர்களின் செயல்பாடுகளை சரிபார்த்து, உணவு மற்றும் மருந்து வழங்க உதவும். இது நோயாளிகளுடனான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நேரடி தொடர்பு அளவைக் குறைக்கும், இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரோபோக்கள்  திருச்சியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது.  இந்த ரோபோக்களை ரிமோட் கட்டுப்பாடு மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.