பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான  வேதாகோபாலன் கணித்துள்ள 12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் நட்சத்திரம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச் செல்லவிருக்கிறார். இன்று (15-11-2020) நிகழவிருக்கும் முழு சுபரான குரு பகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதை துல்லியமாகவும், தெளிவாகவும் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்துள்ளார்.

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48 க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் 5ம் தேதி அதாவது 20 நவம்பர் 2020 அன்று ‘குரு பெயர்ச்சி‘ நிகழவிருக்கிறது.

பொதுவாக, கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது  மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. கிரகப் பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளை மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

15.11.2020 அன்று நிகழவிருக்கும் முழு சுபரான குருபகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச்  செல்லவிருக்கிறார்.

இங்கு குறிப்பிட்டுள்ள குரு பெயர்ச்சிப் பலன்கள்  ராசியின் அடிப்படையில் கோள்-சார ரீதியாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசா புத்தியைப் பொறுத்து தான் முக்கிய மற்றும் பெரும்பாலான பலன்கள் அமையும் என்பதால் அவற்றையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது.

குருபகவான் எப்போதுமே தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட, பார்க்கும் பார்வைக்கு தான் அதிக நற்பலன்களை அளிப்பார்  என்பார்கள். அந்த வகையில் தற்போது மகர ராசிக்கு செல்லும் குரு அந்த ராசிக்கு வழங்குவதை விட அவரின் சுப பார்வைகள் படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் வழங்குவார்.

குரு, தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 5ம் வீடு, 7 ஆம் வீடு, 9ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பது இயல்பு.

அவ்வாறாக குரு பகவானின் புனிதப் பார்வை படவிருக்கும் இடங்கள் ரிஷபம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ராசிகள் ஆகும்.

மகரம் என்பது குரு பகவானின் நீச வீடு ஆகும். எனவே பொதுவாகவே சுப பலன்கள் இந்த வருடம் சற்றுக் குறைவாக இருக்கும் என்பதுதான் பரவலான கருத்து. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. இன்னும் சிறிது காலத்தில்.. அதாவது, 2020, டிசம்பர் 27 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது நீசமான குருவுடன் ஆட்சிபெற்ற சனி அமர்ந்து நீச பங்கம் அளித்து ராஜயோகமாக்கவுள்ளார்.  ஆகவே குரு பகவானின் நீசத்தன்மை குறையும். அவர் தன்னுடைய சிறப்புப்பணியாகிய திருமணம், குழந்தைப்பேறு, சுப நிகழ்ச்சிகள், பணப்புழக்கம் ஆகியவற்றை உலக மக்களுக்கு அள்ளித்தர உள்ளார்.

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், சனி புகவான் உடன் இருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள், என்று இத்தனை காலம் குரு (தனுசு ராசியில்) ஆட்சியாக இருந்தபோது சொன்னதுபோலவே இப்போதும் சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனாலும் திருமணம் நல்லபடியாக முடியும். குழந்தைகளின் படிப்பு தடைப்படுவதுபோல் பயமுறுத்தி, கடைசியில் நல்லபடியாக முடியும். நிதி நிலை சரிந்து, பின் மிக நன்கு உயரும்.

உலக அளவில் சரிந்திருந்த நிதி நிலையும் வணிக வளமும் மெல்லத் தூக்கி நிறுத்தப்படும்.

நின்றுபோயிருந்த மக்களின் உழைப்பு மீண்டும் தொடரவும், அந்த உழைப்புக்கேற்ற நற்பலன்கள் அதிகரிக்கவும் மிக நல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாண்டு நிகழ உள்ள குரு பெயர்ச்சியால் அதிக நற்பலன் பெற உள்ள ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை.

ஏனெனில் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும், கடக ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும், தனுசு ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கும் மீனத்துக்கு லாபஸ்தானமாகிய 11க்கும் வருவது சிறப்பாகும். அதோடு குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகளைத் தன் அருட்பார்வை கொண்டு பார்க்கவும் இருக்கிறார்.

அதற்காக மற்ற ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம். அவர் பார்வை படும் ராசிகள் உங்களுக்கு எந்த வீடு என்று பார்த்து அதில் மேம்பாடு கிடைக்கும் என்பதை தைரியமாக நம்பலாம்.

மேஷம், மிதுனம், சிம்மம், மகரம், கும்பம், ஆகிய ராசியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமான இடத்திற்குச் செல்லாவிட்டாலும் நீசத்தன்மை பெற்றதார் அவர்களுக்கு நன்மை செய்வார்.

எனினும்.. நம் ராசிக்குச் சாதகமாக இருந்தாலும் சரி.. சுமாராக இருந்தாலும் சரி… குரு பகவானை வழிபடுதல் .. அவருக்கான பரிகாரங்கள் செய்தல் நிறைந்த வாழ்வுக்கு வகை செய்யும்.

வியாழக்கிழமை விரதம் இருத்தல், மஞ்சள் வஸ்திரம், லட்டு ஆகியவை தானம் செய்தல், குருவாயூரப்பன், ராகவேந்திரஸ்வாமி.. ஷீர்டி சய்பாபா..  மகா பெரியவர்… ஆசார்ய ஸ்வாமிகள்.. ஜீயர்.. போன்ற எந்த குருவையும் வழிபடுதல் நன்மை தரும். குரு கீதா போன்ற சுலோகங்கள்… சாயி சத் சரிதம்.. குரு சரித்ரம் போன்றவை படித்தல் அற்புத நன்மை தரும். வியாழக்கிழமைகளில் நெய்விளக்கேற்றுதல்.. நவகிரகத்தை 21 முறை சுற்றுதல்.. மூன்று நெய்விளக்கேற்றுதல், தங்க தானம் போன்றவை நிறைவான குருப்ரீதிகள் ஆகும்.

இவற்றைப் பின்பற்றி அனைவரும் நலம் பெறுவோம்.

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்

அஸ்வினி (மேஷம்):

உங்களோட ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்களோட ராசிக்கு 10 – ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போறாரு.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீங்க. ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீங்க. இருவரும் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீங்க. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக்கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

10 – ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீங்க.

ஆனால் இந்த குரு பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாக அமையும்.

விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவாங்க. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீங்க.

 பரணி (மேஷம்):

உங்களோட ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்த குரு பகவான் உங்களோட ராசிக்கு 10 – ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போறாரு.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவாங்க. எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவாங்க. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். விழிப்பு உணர்வு தேவைப்படும் முக்கியமான காலகட்டம்.

உங்களோட பலவீனங்களை பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீங்க. சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீங்க. என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக விழாக்களை முன்னின்று நடத்துவீங்க.

விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

கலைத்துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களோட தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கிருத்திகை 1 (மேஷம்):

உங்களோட ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்த குரு பகவான் உங்களோட ராசிக்கு 10 – ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போறாரு.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

குரு உங்களோட ராசிக்கு 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4 ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வீட்டில் குடியேறுவீங்க.

சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

இளம்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம். எதிர்காலம் பற்றி யோசித்து முடிவெடுங்க. எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீங்க. தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

சிறிய சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீங்க. திருமண விஷயத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. பள்ளி, கல்லூரி கால தோழியை/ தோழரைச் சந்திப்பீங்க.

கலைத்துறையினர் போராடி வாய்ப்புகளைப் பெற்றுப் பெருவெற்றி அடைவீங்க. மூத்த கலைஞர்களை அரவணைத்துப் போங்க.

மாணவ, மாணவிகள் கடைசிநேரத்தில் படித்து பாஸ் செய்வீங்க. உங்களோட தனித்திறமையை வளர்த்துக் கொள்வீங்க. சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

கிருத்திகை 2,3,4 (ரிஷபம்):

உங்கள் ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு சௌபாக்ய ஸ்தானமாகிய வீடான 9 – ம் வீட்டில் நுழைந்து மிகுந்த நற்பலன்களை அளிக்கப்போறாரு.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவீங்க. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பீங்க.

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீங்க. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். தடைப்பட்டுவந்த குழந்தைபாக்கியம் இனி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றிப் புதிதாக வாங்குவீங்க.

பெண்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீங்க. எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீங்க. தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீங்க.

ரோகிணி (ரிஷபம்):

உங்கள் ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்திருந்து மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு சௌபாக்ய வீடான 9 – ம் வீட்டில் நுழைந்து மிகுந்த நற்பலன்களை அளிக்கப்போறாரு.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீங்க. இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போனதிருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் பேசத் தொடங்குவீங்க.

சுபச்செலவுகள் அதிகமாகும். அலைச்சலைக் குறைத்தது உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவாங்க.

குழந்தைப் பறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு உண்டாகும். மகன்/மகளின் வாழ்வில் உயர்வு ஏற்படும்

புதுத் தெம்பு பிறக்கும். காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம். பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும்.

வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீங்க. புது ஏஜென்சி எடுப்பீங்க. ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீங்க. விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.

ஸ்டூடன்ட்ஸ், நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவாங்க. மொழித் திறனை வளர்த்துக் கொள்வீங்க. மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீங்க.

மிருகசீர்ஷம் 1,2: (ரிஷபம்):

உங்கள் ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு சௌபாக்ய ஸ்தானமாகிய 9 – ம் வீட்டில் நுழைந்து மிகுந்த நற்பலன்களை அளிக்கப்போறாரு.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீங்க. குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி உங்களோட புதிய திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களோட முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீங்க. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனைக் குறைந்த வட்டிக்கு மாற்றுவீங்க.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீங்க. தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீங்க. உங்களோட திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன், வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

மிருகசீர்ஷம், 3,4 (மிதுனம்)

உங்களோட 7 மற்றும் 10ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார். இனி இவர் உங்கள்   ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்தாலும், நீச பங்கம் பெறவிருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீங்க.

கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பீங்க. குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார்.

சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவாங்க. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

ஓரளவு பணம் வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவாங்க. திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீங்க.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீங்க. தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவாங்க. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீங்க.

திருவாதிரை (மிதுனம்):

உங்களோட 7 மற்றும் 10 ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார். இனி இவர் உங்கள்   ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்தாலும், நீசபங்கம் பெறவிருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.

பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.

குரு பகவான் 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். குரு உங்களோட சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீங்க.

பழைய நகையை மாற்றிப்புதுப்பிப்பீங்க.

 புனர்பூசம்: 1,2,3 (மிதுனம்) :

உங்களோட 7 மற்றும் 10 ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார். இனி இவர் உங்கள்   ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்தாலும், நீசபங்கம் பெறவிருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீங்க. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீங்க. வேலைச்சுமையால் தூக்கம் குறையும்.

தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களோட படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதிர்ப்புகள் குறையும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் இருந்த பகைமை விலகும்.

மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

மறைமுக எதிரிகளாலும்கூட ஆதாயமடைவீங்க. அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

நீண்ட நாளாகத் தடைப்பட்டு, தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் வாங்குவீங்க. கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். அதிக வட்டிக்கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும்.  நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

புனர்பூசம்,4 (கடகம்):

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் இனி ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும்.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீங்க. உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.

பழுதான வாகனத்தை மாற்றுவீங்க.

பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்து செய்யலாம். இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீங்க.

மேலதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீங்க. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவாங்க.

பூசம் (கடகம்):

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் இனி ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும்.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீங்க. கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மகளுக்கு அல்லது மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீங்க. வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவாங்க. பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறுவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அரசு வகை காரியங்கள் இழுபறியாகும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீங்க. அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவாங்க. ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். படிப்பில் ஆர்வம் காட்டுவீங்க. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீங்க

ஆயில்யம் (கடகம்):

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் இனி ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும்.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீங்க. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவாங்க. அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும்

குருபகவான் உங்களோட லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீங்க. ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீங்க. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன ரக வாகனம் வாங்குவீங்க.

வெளியூர் பயணங்களில் கவனமுடன் சென்று வருவது நல்லது. ஓரளவு பணவரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.

உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களோட தனித்தன்மை வெளிப்படும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும்.

பெண்கள் கூடுதலாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வாங்க. புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்

மகம் (சிம்மம்):

உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் , இனி ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். இவர் நீசபங்கம் பெறவிருப்பதால் நல்லதே நடக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 2,10,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.
வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீங்க. மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறுவீங்க. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீங்க. வாகனத்தைச் சீர் செய்வீங்க.

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீங்க. அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீங்க.

தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவாங்க. மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.

எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீங்க.

வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் ஆகியவை முடிவுக்கு வந்து நிம்மதியான நிலை உருவாகும்.  அலுவலகத்தில் சற்றே முன்னெச்சரிக்கையாயிருப்பது நல்லது.

பூரம் (சிம்மம்):

உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் , இனி ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். இவர் நீசபங்கம் பெறவிருப்பதால் நல்லதே நடக்கும்

அவர் உங்கள், ராசிக்கு 2,10,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்

குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீங்க. கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீங்க. வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீங்க. சிமெண்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீங்க.

வேலைச்சுமை குறைந்து வருமானம் அதிகரிக்கும். தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு உடனே கிடைக்கும். தற்போது வேலைபார்க்கும் இடத்திலேயே நற்செய்திகள் கிடைக்கும் என்பதால் புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

உத்திரம்,1(சிம்மம்):

உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் , இனி ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். இவர் நீசபங்கம் பெறவிருப்பதால் நல்லதே நடக்கும்

அவர் உங்கள், ராசிக்கு 2,10,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குடியேறுவாங்க. புது வாகனம் வாங்குவீங்க. உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகச் சிறிதளவு வாய்ப்புள்ளது. எனவே எதற்கும்.. மாற்றுவழியை யோசித்து வையுங்கள்.

குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீங்க. சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீங்க. நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க.

அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பெண்கள் உயர் கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவாங்க. பெற்றோருடன் இருந்து வந்த கருத்துமோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

உத்திரம்,2,3,4(கன்னி):

உங்களோட ராசிக்கு சுகஸ்தானமான 4 – ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் இனிமேல் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீங்க.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களோட பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வாங்க. சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீங்க.

உங்களோட இலக்கை நோக்கி முன்னேறுவீங்க. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தைத் தலைமையேற்று நடத்துவீங்க. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீங்க. பதினோறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களோட புகழ், கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களோட பெயர் பரிந்துரை செய்யப்படும்.

வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைத்துப் பேச வேண்டாம். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.

உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசு வகை காரியங்களில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீங்க. சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீங்க.

ஹஸ்தம் (கன்னி):

உங்களோட ராசிக்கு சுகஸ்தானமான 4 – ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் இனிமேல் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீங்க.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். கல்யாணம், காது குத்து நிகழ்ச்சி என வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீங்க. மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும்.

உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீங்க.

எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.

அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீங்க. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவாங்க. தோஷங்களால் தடைப்பட்ட கல்யாணம் நல்லவிதத்தில் முடியும். நினைத்ததைச் சாதிப்பீங்க. எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புதிய வேலை அமையும்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித்தரும்.

சித்திரை, 1,2 (கன்னி):

உங்களோட ராசிக்கு சுகஸ்தானமான 4 – ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் இனிமேல் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீங்க.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீங்க. நட்புவட்டத்தால் பலனடைவீங்க.

பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப்போன காரியங்களை விரைந்து முடிப்பீங்க. இல்லத்தில் திருமணம் கூடி வரும். வாகனத்தைச் சீர்செய்வீங்க. அழகு, ஆரோக்கியம் கூடும்.

மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீங்க. உங்களோட ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீங்க. சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீங்க.

மாணவ மாணவிகளின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய படிப்பில் சேருவீங்க.

கலைத்துறையினர் புகழடைவாங்க. சிலருக்கு விருது கிடைக்கும். உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களோட படைப்புத் திறன் அதிகரிக்கும்.

சித்திரை, 3,4 (துலாம்):

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களோட புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் இனி ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீங்க.

அவர் உங்கள், ராசிக்கு 810,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவாங்க. பயணங்களால் உற்சாகமடைவீங்க. தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.

பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. பெற்றோர் விருப்பங்கள் நிறைவேறும்.

கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். புதியவர்களால் பணவரவு உண்டு.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள்.

ஸ்டூடன்ட்ஸ் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வீங்க. அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்

பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்வீங்க.

ஸ்வாதி (துலாம்):

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களோட புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் இனி ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீங்க.

அவர் உங்கள், ராசிக்கு 810,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

உங்களோட பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற பக்குவத்துடன் நடப்பீங்க  கணவன், மனைவிக்குள் மற்றவர்கள் ஏற்படுத்திய  குழப்பத்தைப் பெரியவர்கள் துணையுடன்  சரிசெய்வீங்க. ‘உன் சொந்தம், என் சொந்தம்’ என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவீங்க.  எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்துப் பழைய தவறுகளை மாற்றிக்கொள்வீங்க

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீங்க. வெள்ளிச் சாமான்கள் வாங்குவீங்க. தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. பெற்றோர் விருப்பங்கள் நிறைவேறும்.

பிசினஸ் செய்யறவங்க விளம்பர யுக்திகளை கையாளுங்க. ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீங்க.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

விசாகம் 1,2,3: (துலாம்):

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களோட புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் இனி ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீங்க.

அவர் உங்கள், ராசிக்கு 810,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து வாங்குங்கள். சொத்து விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீங்க.

மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கை கூடி வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க.

பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. பெற்றோர் விருப்பங்கள் நிறைவேறும்.

விசாகம்,4 (விருச்சிகம்):

உங்களோட தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான், ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

அவர் உங்கள், ராசிக்கு 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வந்தாலும் நல்லபடியாகவே நடக்கும். இளைய சகோதரரின் வகையில் பிணக்குகள் வரும். பிறகு சமாதானமாகும். அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண் வறட்டு கௌரவத்துக்காக சேமிப்பைக் கரைத்துக்கொண்டிருக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்ப வேண்டாம். ஆனால் பலகால நண்பர்களால் கட்டாயம் நன்மை நடக்கும்.

கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதங்கள் ஏற்படுவது மாறி, அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

எதிலும் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அரசு வகை விவகாரங்களில் அலட்சியமாக இருக்கவேண்டாம்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீங்க. பழைய பாக்கிகளை போராடி வசூலித்து நிம்மதிப்பெருமூச்ச விடுவீங்க.

பெண்களுக்குத் தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று வேலையில் அமருவீங்க.

அனுஷம் (விருச்சிகம்):

உங்களோட தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான், ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

அவர் உங்கள், ராசிக்கு 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.

சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவாங்க. ஆனால் நீங்கள்ய அனைவரையும் சரியைக எடைபோட்டு கவனமாகப் பழக ஆரம்பிப்பீங்க. உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைச் சிறிது காலத்துக்கு நிறுத்திக்கொள்வது நல்லது. இடைவெளி விட்டு பழகி, நீங்கள் ஒரு புதிர் என்ற அச்சத்தை ஏற்படுத்திவிடுவீங்க.  இதனால் நன்மை விளையும்.

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

உங்களோட ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீங்க. சுற்றுலாதலங்களுக்குச் சென்று வருவீங்க.

தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவாங்க. கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீங்க.

உத்தியோகத்தில் சின்னச்சின்ன அலைக்கழிப்புகள் இருந்தாலும் பெரும்பாலும் நிம்மதி உண்டு.

கேட்டை (விருச்சிகம்):

உங்களோட தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான், ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

அவர் உங்கள், ராசிக்கு 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.

புது வாகனம் வாங்குவீங்க.

பெரிய திட்டங்கள் தீட்டுவீங்க. தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீங்க. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீங்க. உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீங்க. மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.

தாயாரின் உடல் நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

உத்தியோகத்தில் சின்னச்சின்ன சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீங்க.

பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீங்க. விரும்பிய இடத்திற்று மாற்றல் சாதகமாகும்.

மாணவ, மாணவிகள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீங்க. அறிவாற்றல் கூடும். சின்னச்சின்ன தவறுகளையும் திருத்திக்கொண்டு நற்பெயர் வாங்குவீங்க.

மூலம் (தனுசு):

இதுவரையில் உங்களோட ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார். குரு பகவான் இனி உங்களோட ராசியை விட்டு விலகி, 2 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால்  நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அவர் உங்கள், ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

இத்தனை காலமாக விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவாங்க. உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீங்க. பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீங்க. தங்க ஆபரணங்கள் வாங்குவீங்க.

குரு உங்களோட ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் லோன்களை  அடைப்பீங்க.. குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்யம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். ஷேர் மார்க்கெட்டில் ஜெயிப்பீங்க. குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் பதவி உயரும். சம்பளம் உயரும். அரசாங்க உதவி  தேவைப்படும் விஷயங்கள் விரைந்து முடியும்.

உங்களோட மதிப்பு, மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க அல்லது தொடர்வீங்க. கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. என்றாலும், வேலைச்சுமையும் இருந்துக்கொண்டேயிருக்கும்.

தேவையே இல்லாத சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் (தனுசு):

இதுவரையில் உங்களோட ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார். குரு பகவான் இனி உங்களோட ராசியை விட்டு விலகி, 2 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால்  நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அவர் உங்கள், ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குரு உங்களோட ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீங்க. உடல்வலிவு அதிகரிக்கும். குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அரசு உதவி கிட்டும்.

திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழைமை வாய்ந்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் தடைப்பட்ட காரியங்கள் முடியும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் உதவுவாங்க. பெற்றோருடன்/ பெரியவர்களுடன்/ ஆசிரியர்களுடன்/ மேலதிகாரியுடன் வீண்வாக்குவாதம் செய்யவேண்டாம்.

சமயோசித புத்தியால் எதையும் சாதிப்பீங்க. மனைவிக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழிச் சொத்து கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீங்க. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

உத்திராடம்,1 (தனுசு):

இதுவரையில் உங்களோட ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார். குரு பகவான் இனி உங்களோட ராசியை விட்டு விலகி, 2 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால்  நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அவர் உங்கள், ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

குரு உங்களோட ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் விண்ணப்பித்த லோன் கிடைக்கும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்யம் அருமையாய் இருக்கும். பங்குச் சந்தையில் பணம் வரும். குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அரசாங்க உதவி கிடைக்கும்.

வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீங்க. உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவாங்க. தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவாங்க. வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமான ஒருவரைச் சந்திப்பீங்க.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீங்க. இரட்டிப்பு லாபம் உண்டு. புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீங்க. சொந்த இடத்துக்குச் சிலர் கடையை மாற்றி அழகுபடுத்துவீங்க.

வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீங்க.

சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவாங்க. சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீங்க.

உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீங்க.

உத்திராடம்,2,3,4 (மகரம்):

உங்களோட ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக நீசபங்கம் பெறவிருப்பதால் அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

இதுநாள் வரை உங்களை ஒதுக்கியவர்களே முக்கியத்துவம் தருவாங்க. கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவாங்க. எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

உங்களோட குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீங்க. கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும்.

வேலைச்சுமை அதிகரித்தாலும் சுலபமாகச் சமாளித்துப்புன்னகைப்பீங்க. உங்களோட பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும்.

திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீங்க. வங்கிக் கடனுதவியும் கிட்டும்.

பெண்கள் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொண்டாலும் பிறகு உண்மை தெரிந்து தெளிவு பிறக்கும். பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றி வாழ்க்கையை இப்போதே நேர்வழிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும் வேலைச்சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும்.

திருவோணம் (மகரம்):

உங்களோட ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக நீசபங்கம் பெறவிருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த உங்களோட படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவீங்க. வருமானம் உயரும்.

ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருப்பதால், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருங்கள். தியானம், யோகா போன்றவை செய்வது நல்லது.

யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் முன்னால் நிற்க வேண்டாம். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று நகரந்துக்கு வெளியே இடம் வாங்குவீங்க.

உங்களோட செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீங்க. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதி பெருகும். பணப்புழக்கம் அதிமாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றிபெறுவீங்க. ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீங்க.வியாபாரிகள்  தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.

அவிட்டம்,1,2 (மகரம்):

உங்களோட ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக நீசபங்கம் பெறவிருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

மணமாகாத பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று புதிய வேலையில் அமர்வாங்க. மொழி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வீங்க. பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

தள்ளிப்போன திருமணம் கை கூடி வரும். போட்டிகளில் வெற்றிபெறுவீங்க. கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையின் ஆரோக்கியம் சீராகும்.

கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீங்க. புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீங்க. புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம்

அலுவலக ரகசியங்களை வெளியே சொல்லவேண்டாம். உங்களோட திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவாங்க. குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள்.

ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. ஆனால், பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

அவிட்டம், 3,4 (கும்பம்):

இத்தனை காலம் உங்களோட ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், ராசிக்கு 12 – ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 4,6,8 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீங்க. வகுப்பறையில் சக ஸ்டூடன்ட்ஸ் பாராட்டும்படி நடந்துகொள்வீங்க.

மனத்தில் பட்டதை பளிச்சென பேசி மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவீங்க. புதிய கடன்கள் வாங்கவேண்டாம். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குரு உங்களோட சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீங்க. நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீங்க. சிலர் வேறு ஊருக்கு குடிபெயர்வீங்க.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் அடைய வழி கிடைக்கும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும்.

வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. பூர்விகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீங்க.

மின்னணு, மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் நிறைகளைப் பாராட்டத் தயங்காதீங்க.

சதயம் (கும்பம்):

இத்தனை காலம் உங்களோட ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், ராசிக்கு 12 – ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 4,6,8 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும் வேலைச்சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.  ஆனால் அது குடும்பத்தினருக்குத் திருப்தி கொடுக்கும். குடும்பத்தில், கணவன், மனைவிக்குள் வரும் சிறுசிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

அநாவாசியமாக யாரிடமும் வாக்குறுதி தரவேண்டாம். ஜாமீன்/ ஷ்யூரிட்டி கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும்.

பழைய கடன் பிரச்னை பற்றிய தேவையற்ற பயம் வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கட்டுக்குள்  இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். எனினும் விஷயம் நல்லபடியாக முடிந்து திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீங்க. புதிதாக அறிமுகமாகும் வாடிக்கையாளர் ஒருவரால் ஆதாயமடைவீங்க.

பூரட்டாதி,1,2,3 (கும்பம்):

இத்தனை காலம் உங்களோட ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், ராசிக்கு 12 – ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்

அவர் உங்கள், ராசிக்கு 4,6,8 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

பிரபலமான புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. பழைய வீட்டை சிலர் இடித்துப் புதுப்பிப்பார்கள். அனுமதி கிடைத்துச் சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவாங்க. உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீங்க.

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீங்க. அவர்களது உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் பற்றி திட்டமிடுவீங்க. மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் தொல்லை ஒரு வழியாகத் தீரும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும். நோய்கள் முடிவுக்கு வரும். வழக்குகளின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும். பங்குச் சந்தையில் லாபம் கூடும்.

பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டுக்கிடைக்கும். ஊதியமும் உயரும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளி மனிதர்களிடம் எச்சரிகையுடன் பழகுங்கள்.

மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களோட திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். சாப்பிடவும் தூங்கவும் நேரம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். அவார்ட் கிடைக்கும்.

பூரட்டாதி, 4 (மீனம்):

உங்களோட ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 – ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 – ம் வீடாகிய லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் பெறுவதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. வருமானம்/ லாபம் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 3,5,7 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

மூத்த அதிகாரிகளுடன் முரண்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்வீங்க.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீங்க. பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

லாபம் கூடுதலாகும். எந்த வருமானமும் சற்றே நிதானமாக இருக்கும். ஆனால் அபரிமிதமாக இருக்கும்.

இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி லாப ஸ்தான குரு பகவான் நல்ல தீர்வுகளைத் தருவார்.

கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீங்க. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

குரு 5 – ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீங்க.

உத்திரட்டாதி (மீனம்):

உங்களோட ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 – ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 – ம் வீடாகிய லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் பெறுவதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. வருமானம்/ லாபம் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 3,5,7 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் கூடி வரும்.

தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத்தொடங்குவீங்க. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீங்க.

திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள், செல்போன், லேப் டாப், டேப் வாங்குவீங்க. தாயார் மற்றும் தாய்வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரர் விரும்பி வந்து பேசுவாங்க. உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.

பயணங்கள் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் விரைந்து  செலுத்தி நினைத்ததற்கு முன்பே கடனை அடைத்துவிடுவீங்க. . முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு வாழ்க்கை நடத்துவதால் உற்சாகம் பெருகும்.

ரேவதி (மீனம்):   

உங்களோட ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 – ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 – ம் வீடாகிய லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் பெறுவதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க.  வருமானம்/ லாபம் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 3,5,7 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக்கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். புதிதாக வாகனம் வாங்குவீங்க. தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பங்குச் சந்தையில் பணம் வரத் தொடங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீங்க. தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீங்க.

குரு ராசிக்கு 7 – ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீங்க. பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீங்க. மனைவி வழியில் ஆதாயமடைவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க.

தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவாங்க. போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீங்க. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. யாருக்கும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம்.

உங்களோட திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். புதிய வேலை கிடைக்கும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்து கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீங்க. வாடிக்கையாளர்கள் விரும்பி வருவாங்க. புதிய கிளைகள் தொடங்குவீங்க.

– முற்றும்.