லகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கொரோனாவில் இருந்து மக்கள் தப்பிக்கும் வகையுல் ஸ்டே ஹோம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை பதிவிட்டு உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலுள்ள  புர்ஜ் கலிஃபா கட்டிடம் உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை பெற்றுள்ளது. 163 மாடிகளை கொண்ட இந்த உயரமான கட்டிடத்தின் கோபுரத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், STAY HOME என்ற வார்த்தை வண்ண விளக்குகளால் ஒளிரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

ஏற்கனவே இந்த கோபுரத்தில் கடந்த ஆண்டு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் வெளியிடப்பட்டது. முன்னதாக இசை அமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக்கான்  உள்பட பலரது புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.