எஸ்.பி.பி கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வர வேண்டும் என்று பட தயாரிப்பாள கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, பாடலாசிரியர் பிறைசூடன் பிரார்த்தனை செய்துள் ளனர்.
பாடலாசிரியர் பிறைசூடன்: இசை யால், உலகையாண்ட இனிய நண்பரே இனியும் உனது இசைதேவை இந்த உலகம் தேடிகிறது. இறைவனி டம் மனம் மொழி, மெய்களால் நீ பாடிய பாடல்கள் அத்தனையும் உன்னை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கட்டும். ரசிகனாக தொண்டனாக பாடலாசிரியனாக இறையருளை வேண்டும் குருவருளை யும் திருவருளையும் இறைஞ்சும்…


தயாரிப்பாளர் கலைப்புலி தாணு : இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா! பாலு விரைந்து வா!

தயாரிப்பாளர் டி சிவா: மனிதருள் மாணிக்கம் என்று போற்றப்படும் வெகு சிலரில் ஒருவர் எஸ்பிபி பிறந்தால் எஸ்பிபியாக பிறக்க வேண் டும் என்று வேண்டும் கோடிக் கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனை யால் எல்லாம் வல்ல ஈசன் அருளால் நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்
இவ்வாறு சிவா கூறி உள்ளார்.