யாழ்:

லங்கை பிரதமர் ரணில் தங்கிய ஓட்டல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ் நகருக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு யூஎஸ் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் யூஎஸ் ஓட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இருந்து மர்ம நபர்கள் ஓட்டல்  மீது கற்களை வீசி தாக்கினர். பிறகு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து  தீவிர விசாரணை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தங்கிய ஓட்டல் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.