வாடிகன்,
சிரியாவில் உடனடியாக போரை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வெளியேற்றுங்கள் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை தீவிர முயற்சி மேற்கொண்டது. அதையடுத்து ஏற்பட்ட உடன்படிக்கைபடி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் கையெழுத்திட்டன.
ஆனால், சில நாட்கள் மட்டுமே நடைமுறையில் இருந்த இந்த ஒப்பந்தந்ததை இரு நாடுகளும் மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டன.
சிரியா அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியா, கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் அலெப்போ நகரம் மீது தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அலெப்போ நகரமே சிதைத்து வருகிறது.
சமீபத்தில் நடந்த குண்டு வீச்சில் சுமார் 150 பேர் பலியாகினர். நேற்று நடந்த குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த உள்நாட்டு போரில் ஏராளமான பொதுமக்கள் பலியாவதால் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
siriya
இந்த பதட்டமான சூழ்நிலையில் சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாடிகனின் பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசுகையில், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் சண்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.
war-1
விமான குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை வெளியேற்றும் வரையிலாவது போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.” என்றார்.