சென்னை: அறிவித்தவாறு திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவித்துள்ளனர்.

நாளை வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக சங்க தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் நடராஜன் கூறியதாவது: வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி  நடைபெறும். எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை. பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்துக்கு கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்படமாட்டோம்.

வேலைநிறுத்தத்தில் 95 சதவீதம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.  சுற்றறிக்கையை கண்டு நியாயத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம். எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் இதுவரை எதுவும் பேசவில்லை என்று கூறினார்.