திரானா:  அல்பேனியாவை தாக்கிய மிக சக்திவாய்ந்த பூகம்பம் 26ம் தேதி அதிகாலையில் தலைநகர் திரானாவையும் அருகிலுள்ள துறைமுக நகரமான டூரஸையும் உலுக்கியது, இதனால் குறைந்தது இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

6.4 ரிக்டர் அளவில் நிகழ்ந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரத்திற்கு (0300 ஜிஎம்டி) சற்று முன்னதாகவே ஏற்பட்டது என்று யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) கூறியது, இரண்டு மாதங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது சக்திவாய்ந்த நடுக்கம் இதுவாகும்.

மத்திய வடக்கு அல்பேனியாவில் உள்ள குர்பின் நகரில் ஒருவர் பீதியடைந்து கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வமற்ற வீடியோ காட்சிகளின் படி, அட்ரியாடிக் கடற்கரையில், டிரானாவிற்கு மேற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள டூரஸில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததைக் காட்டியது.

மற்ற காட்சிகள் பெரிய விரிசல்கள் விழுந்த கட்டிடங்களையும், இடிந்து விழுந்த பகுதிகளைக் கொண்ட கட்டிடங்களையும் காட்டின.  அவற்றில் ஒரு படுக்கையறை சுவர் காணாமல் போன ஒரு அபார்ட்மென்ட், மற்றும் ஒரு கார் தீப்பிழம்புகளாக வெடித்தது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.