மாணவிகள் துப்பட்டாவால் முகத்தை மூடக்கூடாது: அண்ணா பல்கலைக்கழகம் புதிய கட்டுப்பாடு
சென்னை:
கல்லூரிக்குள் வரும் மாணவிகள் தங்கள் முகத்தை துப்பட்டவால் மூடக்கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மாணவிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள் மத்தியில் பெண்கள் ‘ஜில்பாப்’ எனப்படும் பர்தா அணிவது வழக்கம். இதனால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.
ஆனால் தற்காலங்களில், பள்ளிச் சிறுமிகள் முதல் வயதானவர்கள் ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி முகத்தை மூடிக்கொண்டு செல்கின்றனர். இதற்கு காரணமாக ‘மாசு’வை கூறினாலும், அவர்கள் தங்களை பிறர் அடையாளம் கண்டுக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையே ஷாக்காக வைத்துக்கொண்டு பலர் சமூக விரோத செயல்களிலும், திருட்டு போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முகத்தை மூடுவதை தவிர்க்க கூறும்போது, அது தனி மனித உரிமை என்று வாதிட்டு வருகிறார்கள்.
தற்போது இந்த முகத்தை துணியால் மூடும் கலாச்சாரம் தற்போது கல்லூரி மாணவிகளிடையேயும் அதிகரித்து உள்ளது. கல்லூரிக்குள் இருக்கும்போதும் முகத்தை மூடிக்கொண்டு, புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தற்போது பொறியியல் கவுன்சிலிங் முடிந்து முதலாண்டு பி.இ. மற்றும் பி.டெக் வகுப்புகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை போன்றவை குறித்து புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி . சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டடவியல், கலை படிப்புகளுக்கான ஆர்கிடெக்ட் கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு வாகனம் ரோந்து வரஉத்தரவு.
பல்கலைக்கழகத்தின் வளாகத்தில், ராக்கிங் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தல்.
மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள்.
கல்லூரி வளாக பகுதிகளில் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது, வகுப்புகளை புறக்கணிக்காமல் பங்கேற்க வேண்டும். மாணவ-மாணவிகளிடம் ராக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் காதில் ஹெட்போன் கருவி அணிந்து வரக்கூடாது, மொபைல் போன் ஹெட்செட்டை கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.
மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது.
வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் அதில் முகத்தை மூடும் கண்ணாடியை திறந்து விட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவ மாணவியும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
பேராசிரியர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும், காவலாளிகளும் அடையாள அட்டையை காட்டச் சொன்னால் மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும்
இவ்வாறு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.