டெல்லி: மாணவர்களுக்கு பரீட்சை இருக்கும் நேரத்தில், பிரதமர் மோடி பரிக்ஷா பெ சர்ச்சா என்று கூறி நேரத்தை வீணடிக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியிருக்கிறார்.

டெல்லியில் பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பு உரையாற்றினார். இதை காங்கிரசின் மூத்த தலைவர் கபில்சிபல் கேலி செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது: மாணவர்கள் முக்கியமான கட்டத்தில் உள்ளனர். அவர்கள் பரிட்சைக்கு தயாராகி வருகின்றனர். இந்த தருணத்தில் அவர்களின் நேரத்தை பிரதமர் மோடி வீணடிக்கிறார்.

அவர்களை தேர்வுக்கு தயாராக அனுமதிக்க வேண்டும். சிபிஎஸ்இ, பட்டப்படிப்புகள் பற்றி பொதுமக்கள் வெளிப்படையாக பேச வேண்டும். அந்த பட்டத்தால் அவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி பேச வேண்டும் என்றார்.

முன்னதாக டெல்லியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2,000 பேருடன் பிரதமர் மோடி உரையாற்றினார். தமது கவனத்தை பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொண்டு பிரதமர் மோடி வெளிப்படையாக பேசினார்.

தொழில்நுட்பத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, நம் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார்.