சென்னை

மாணவி தற்கொலை செய்துக் கொண்ட் விவகாரத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை வெடித்துள்ளது.

சென்னை அருகே சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது.. அந்தத் தேர்வில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவி ராகமாலிகா என்ற மாணவி காப்பியடித்ததாகவும் அதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த மாணவி, மாணவியர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது.  விடுதியில் உள்ள பொருட்களை மாணவர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.   பதட்டம் காரணமாக சத்யனாமா பல்கலைக் கழகத்தின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.