சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்2 பொதுத்தேர்வில் கடைசி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பிளஸ்2 மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா பரவலும் அதிகரித்தால், மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன்ல், பிளஸ்2 தேர்வின் கடைசி தேர்வு மார்ச் 24ந்தேதி நடைபெற இருந்தால், பெரும்பாலான மாணவ மாணவிகள் தேர்வுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து, அவர்களுக்கு மறு தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து,  மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடைசித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.
இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ,
கடந்த மார்ச் 24-ந் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4-ம் தேதி மறு தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4-ம் தேதி வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும், 12ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 36,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 27-ம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் பாடங்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தனிநபர் இடைவெளி யுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.