கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை। படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை। இதனால் பலரும் சமூகவலைத்தளத்தில் தங்களை பிசியாக வைத்துள்ளனர் ।
இந்நிலையில் சண்டைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதள ட்ரெண்ட்டாக இருக்கிறது.


அனைவருமே வீட்டிலிருந்தவாறு படத்தின் சண்டைக் காட்சி போன்றே வடிவமைத்து படமாக்கியுள்ளனர். இதில் முக்கியமான சண்டைக் கலைஞர்கள் அனைவருமே நடித்துள்ளனர். இந்தப் படமாக்கல் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. பலரும் இந்த வீடியோவுக்கு சண்டைக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.