உத்தரபிரதேசம்:
த்தரபிரதேசத்தில் அரியவகை டால்பினை முட்டாள் இளைஞர்கள் கட்டை மற்றும் கோடாரியால் தாக்கி கொன்ற வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலகின் அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கைநதி டால்பினை, உத்தர பிரதேசத்தில் முட்டாள் இளைஞர் கும்பல் ஒன்று கட்டை, கோடரியால் தாக்கி கொலை செய்த வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை அரசுப்பள்ளி ஆசிரியரும் மாணவர்களின் உற்ற தோழனுமான செல்வம் என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்ட அவர், எதார்த்தமாக வலையில் சிக்கிய டால்பினை கடலில் மீண்டும் விடும் தமிழக மீனவர்கள்..
“தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்றும் தமிழனின் பெருமையை பதிவிட்டுள்ளார்.