சென்னை:

க்கள் நடமாட்டம் உள்ள தேனாம்பேட்டை பகுதியில்  அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அண்ணா சாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கம் அருகே தேனாம்பேட்டை காவல்நிலைய மும் உள்ளது. இன்று மாலை மக்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றனர்.

போக்குவரத்து அதிகம் உள்ள மாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் அடைந்தனர். வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த கார் மற்றும் கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை ஆணையர் சம்பவ  இடத்துக்கு வருகை தந்து விசாரணை நடத்தினார். பட்டப்பகலில் குண்டு வீசப்பட்ட இந்த  சம்பவம்  சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube https://www.youtube.com/watch?v=9ge9C4pfCnA?feature=youtu]