ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-01 செயற்கைகோள் மற்றும் 9வணிக ரீதியிலான செயற்கை கோள்களுடன்  பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதனப்டி இன்று மாலை 3.02 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்கான கவுன்டவுன்  நேற்று மதியம் 1.02 மணிக்கு தொடங்கியது. அதன் பின்னர் திட, திரவ எரிபொருள் நிரப்புதல்உள்ளிட்ட பணிகளை விஞ்ஞானிகள் குழு தொடங்கியது.

இந்த நிலையில், இன்று காலை முதலே அவ்வப்போது  இடி மழை பெய்து வந்தால், ஏவுகனை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.  இதனால், ஏவுகனை விண்ணில் செலுத்தப்படுவது 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, 13.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்ட செயற்கை கோள் 13.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணுக்கு சென்றுள்ள இஓஎஸ்-01 செயற்கைகோள்  விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள்கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படும் என்றும், இதிலுள்ள சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

அத்துடன்,  லிதுவேனியாவின் ஒரு செயற்கைக்கோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தலா 4 என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஒன்பது  வணிக ரீதியிலான  செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு அவற்றின் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.