சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகவுள்ள ‘புஷ்பா’ படத்தை தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கேதார் சிலகம்ஷெட்டி தயாரிக்கவுள்ளார்.

https://twitter.com/TheDeverakonda/status/1310453706769408000

இன்று (செப்டம்பர் 28) விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.