இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் யாஷிகா ஆனந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘சல்பர்’ என பெயரிட்டுள்ளனர் . முகேஷ் ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். மேலும் அவரே இந்தப் படத்தில் வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதன் முறையாக லீட் ரோலில் யாஷிகா அதுவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை யாஷிகா வெளியிட்டுள்ளார் . இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

https://www.instagram.com/p/CMHp7DZFsnb/