இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ்

கொளுத்தும் வெயிலுக்கு உங்கள் குடும்பத்தினரை குளுகுளுவென வைத்திருக்க  சம்மர் ஸ்பெஷல் செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்… செய்து, அருந்தி பாருங்களேன்….

தேவையான பொருட்கள்:

செவ்வாழைப் பழம்- ஒன்று

சாக்கோ பவுடர் -ஒரு டீஸ்பூன்

பால்- ஒரு கப்

சர்க்கரை -5 டீஸ்பூன்

செய்முறை :

நன்கு கனிந்த ஒரு செவ்வாழை பழத்தை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய செவ்வாழை துண்டுகளுடன் சர்க்கரை ,சாக்கோ பவுடர் இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும்

பிறகு பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும்.

ஆற வைத்த பாலை செவ்வாழைப்பழத் துண்டு சர்க்கரை சாக்கோபவுடர் கலவையுடன் சேர்க்கவும் .பிறகு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும் சுவையான ஸ்பெஷல் செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக் தயார்

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம். கோடை காலத்தில் உடலை குளிர்ச்சி படுத்தக் கூடிய அற்புதமான பானம் இது.

இந்த செவ்வாழையில் வைட்டமின் சி , நார் சத்து சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்ற சத்துப் பொருட்கள் இருப்பதால் அனைத்து வயதினரும் பருகலாம்…

நன்றி: தமிழ்நண்பன், வாட்ஸ்அப் பதிவு