யக்குனர் சுந்தர்.சி யின் 90 சதவீத படங் கள் நகைச்சுவை மையமாக கொண்டே உருவாகி இருக்கிறது இவரது இயக்கத்தில் கமல்ஹசன் நடித்த ’அன்பே சிவம்’ மட்டும் முற்றிலும் மாறுபட்ட தாகவும் கமல் பாணியிலான படமாகவும் இருந்தது. சமீபகால கட்டத்தில் இயக்கிய கலகலப்பு, அரண்மனை போன்ற படங் கள் நகைச்சுவை பின்னணியில் அமைந்த படங்களாகவே உருவாகின. தற்போது அரண்மனை 3ம் பாகம் இயக்கி வருகி றார். இதில் ஆர்யா, ராஷி கன்னா நடிக்கின்றனர்.


இந்நிலையில் சுந்தர் சி புதிய படத்தில் நடிக்கிறார். இதில் ஜெய் இணைந்து நடிக் கிறார். சுந்தர்சியின் அவ்னி பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளாது. சுந்தர்.சி யிடம் இணை இயக்குனாக பணியாற்றிய பத்ரி இயக்க உள்ளார். ஏற்கனவே சிவா நடித்த தில்லு முல்லு., சுந்தர்.சி நடித்த வீராப்பு, ஐந்தாம் படை படங்களை இயக்கியவர்.
சுந்தர். சி, ஜெய் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்துவருகிறது.